Saturday 27 August 2011

நம் ஈழத்தமிழர்களுக்காக ஒரு பாடல்: 7ஆம் அறிவு படம்

7ஆம் அறிவு படத்தில் ஈழத்தமிழர்களுக்காக ஒரு பாடலை இசையமைத்து அர்பணித்திருக்கின்றார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் அசத்தலான நடிப்பில், ஸ்ருதி ஹாஸன் ஜோடியாக உருவாகி வரும் '7ஆம் அறிவு' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

.இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டதால், போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். பாடல்களுக்கான கடைசிக்கட்ட இசைக்கோர்ப்பு வேலைகளில் மூழ்கியிருக்கிறார் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்.

இந்நிலையில் இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என நால்வரும் கலந்து ஆலோசித்து இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை முடிவு செய்திருக்கிறார்கள்.

அந்த தேதியை நடிகர் சூர்யா தற்போது அறிவித்திருக்கிறார். அதன்படி வரும் செப்டம்பர் 10 அன்று இப்படத்தின் பாடல்கள், சிங்கப்பூரில் வைத்து வெளியிடப்பட இருக்கிறது.

இப்படத்தில் இடம்பெற இருக்கின்ற 'இன்னும் என்ன தோழா' என்ற பாடலை ஈழத்தமிழர்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இத்திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது.

மேயராகும் வாய்ப்பு: நடிகை குஷ்பு

நடிகை குஷ்புவுக்கு சென்னை மேயர் ஆகும் வாய்ப்பினை வழங்க திமுக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.க.வில் சேர்ந்த குஷ்புவுக்கு முந்தைய அரசில் அமைக்கப்படவிருந்த மேலவையில் பதவி வழங்கப்படலாம் என்று முதலில் கூறப்பட்டது.

மேலவை கொண்டு வருவதற்கு முன்பே தேர்தல் வந்து விட்டதால், தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் வழங்கப்படும் என்று பேசப்பட்டது.

ஆனால் எந்த தொகுதியும் குஷ்புவுக்கு வழங்கப்படவில்லை. அதேநேரம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் குஷ்பு.

தேர்தல் பிரசாரத்தில் வடிவேலுக்கு போட்டியாக களமிறங்கி பணியாற்றிய குஷ்பு, தேர்தல் தோல்விக்குப் பிறகும் வடிவேலு போல ஒதுங்கி இருக்காமல், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைப்பாடுகள், அனைத்து கட்சியிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்ததந்த கட்சியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி தேர்தலில், திமுக சார்பாக யாரை நிறுத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அதில் திமுகவுக்காக தொடர்ந்து பணியாற்றும் குஷ்புவை நிறுத்தினால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறதாம் தலைமை.

முதல் கணவருடன் விஜயகுமாரின் மகள் வனிதா

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் வனிதாவின் பிரச்சனை நாம் அனைவரும் அறிந்தது.

இவர் தற்போது தனது இரண்டாவது கணவரை பிரிந்து, மீண்டும் முதல் கணவருடன் இணைந்துள்ளார்.

தன் மகன் ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று தனது பெற்றோர் நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா மீது அதிரடியாக புகார் கொடுத்தவர் வனிதா.

இந்த விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு பூதாகராமாக வெடித்து, சினிமாத்துறையில் இருப்பவர்களின் லட்சணத்தை உலகுக்கு உணர்த்தியது. தனது தாயும், தந்தையும் எப்போதும் போதையில் இருப்பார்கள்.

அவர்கள் வீட்டில் தினமும் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேட்டிகளில் தெரிவித்த வனிதா, தற்போது முதல் கணவருடன் சேர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், முதல் கணவர் ஆகாஷூம் என்னை புரிஞ்சுக்கலை. நானும் அவரை புரிஞ்சுக்கலை. என்னை பிரிந்த பின்னும் அவர் ஸ்ரீராமானாதான் வாழ்ந்திருக்கிறார்.

இந்த பிரச்சனைகளுக்கு பிறகு எனக்கு, அவர் மேல உள்ள அன்பும், மரியாதையும் இன்னும் கூடியிருக்கு. தனக்கு ஒரு ஸ்டெப் ஃபாதர் இருப்பதை ஸ்ரீஹரி விரும்பலை. அதனால்தான் அவன் என்னை பிரிய முடிவு பண்ணியிருக்கான்.

இப்போ அவனுக்காக நான் பழைய வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டேன். ராஜனும் (2வது கணவர்) அதை புரிஞ்சுகிட்டு விலகிட்டார்.

என் பழைய குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கோம் என்று கூறியுள்ளார்

Monday 22 August 2011

டைரக்டர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் இணையும் சோனம் கபூர்

பாலிவுட் முன்னனி ஹீரோவான அமீர்கானுடன் இணைந்து டைரக்டர் முருகதாஸ் 'கஜினி' படம் பண்ணினார்.

அதற்கு பிறகு,முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க ஆர்வம் காட்டியதாக கூறுகிறார்கள்.

கொலிவுட்டில் 'ஏழாம் அறிவு' படத்துக்கு பிறகு முருகதாஸ் இயக்கும் படத்தில் நாயகன் விஜய் உடன் நாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர் ஆகியோரிடம் பேசியிருப்பதாக தகவல் பரவியுள்ளது.

என் தந்தை அனில் கபூரை போல நானும் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறேன். முப்பது வருடங்களுக்கு முன் டைரக்டர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பல்லவி அனு பல்லவி படத்தில் என் தந்தை நடித்ததை என்னிடம் கூறியுள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' டைரக்டர் முருகதாசின் லேட்டஸ்ட் படம் ஓன்றில் நான் நடிப்பதாக பட உலகில் பேச்சு கிளம்பியுள்ளது.

தென்னிந்தியாவின் பிரபல இயக்குனர்களின் 'பிலிம் மேக்கிங் ஸ்டைலை நான் ரொம்ப விரும்புகிறேன். டைரக்டர் முருகதாசின் இயக்கத்தில் நான் நடிக்க தயாராக உள்ளேன் என்று சோனம் தெரிவித்துள்ளார்.

சோனம் கபூர் பட வாய்ப்பை ஏற்பதற்கு முன் படத்தின் நாயகன் மற்றும் நாயகி ரோல் தொழில்நுட்ப டீம் ஆகிய அம்சங்களையும் அலசிய பிறகே படத்தில் நடிக்க 'ஓ.கே' சொல்வாராம்.

கருப்பம்பட்டி படத்தின் இசை வெளியீடு

கருப்பம்பட்டி என்னும் படத்தை 'சுந்தர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்காக நாயகியை முத்தமிட்டு நடிக்க நாயகன் அஜ்மல் மறுத்து கோலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கியது அனைவரும் அறிந்த விடயம்.

இந்த 'கருப்பம்பட்டி' படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள். இப்படத்தில் சந்தோஸ், கண்ணன், பி.லெனின், வெங்கல் ரவி அண்ட் வீரமணி, வாசுகி பாஸ்கர், வி.சிவராமன், பி.டி.செல்வகுமார் மற்றும் பலர் பணியாற்றியுள்ளார்கள்.

விறுவிறுப்பாக காட்சிகளை அமைத்து 'கருப்பம்பட்டியை' டைரக்டர் பிரபுராஜ சோழன் இயக்கியிருப்பதாக படவட்டாரம் கூறுகிறது.

பாலிவுட் பிரபலங்களை சந்தித்த கார்த்திகா

டைரக்டர் கே.வி. ஆனந்த்தின் இயக்கத்தில் 'கோ' படத்தில் நாயகன் ஜீவா உடன் இணைந்து நடித்தவர் நாயகி கார்த்திகா.

தற்போது இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் ஆசை துளிர்விட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

தமிழில் வெற்றி பெற்ற 'கோ' படத்தை இந்தியில் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். இதில் நாயகியாக கார்த்திகா நடிக்க இருப்பதாக கூறுகிறது பட வட்டாரம்.

பாலிவுட் பட உலகிற்கு ஏற்ற நாயகியாக விழிகளில் பிரௌன் காண்டாக்ட் லென்ஸ், பளபளக்கும் 'நெய்ல் பாலிஸ்',காற்றில் தவழும் ஸ்டைலான கூந்தல் என தோற்றத்தோடு பாலிவுட் படப்புள்ளி டேவிட் தவான், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அஜய் தேவ்கன் ஆகியோரை கார்த்திகா சந்தித்தாராம்.

கார்த்திகாவை பாலிவுட் படங்களில் நடிக்க வைக்க 'தமிழ் சினிமாவின் முன்னாள் நாயகி' ராதாவும் படப்புள்ளிகளிடம் பேசியதாக கூறுகிறார்கள்.

மும்பையில் பிறந்து, வளர்ந்த கார்த்திகாவுக்கு இந்தி சரளமாக பேசத்தெரியும் என்பதால் சரியான இந்தி பட வாய்ப்பிற்காக ஆர்வமாக காத்திருக்கிறாராம்.

Thursday 18 August 2011

இந்துவாக மாறியதால் கோவில் வழிபாடுகளில் பங்கேற்கும் நயன்தாரா


பிரபுதேவாவை மணந்து கொள்ள நயன்தாரா இந்துவாக மாறினார். மதம் மாறும் சடங்குகள் சமீபத்தில் சென்னையில் உள்ள ஆரிய சமாஜம் கோவிலில் நடந்தது.
தற்போது அவர் முழு இந்துவாக காட்சி அளிக்கிறார். கோவில்களுக்கு சென்றும் வழிபட்டு வருகிறார்.நயன்தாரா புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லை. சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தமாதம் பிரபு தேவா- நயன்தாரா திருமணம் மும்பையில் நடக்க உள்ளதாகவும், அதன்பிறகு அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
நயன்தாரா கடைசியாக நடித்த தெலுங்குபடம் ஸ்ரீராமராஜ்ஜியம். இதில் சீதை வேடத்தில் நடித்துள்ளார். ராமன் வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்தார். இந்த படத்தின் பாடல் சீ.டி. வெளியீட்டு விழா ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் உள்ள சீதாராமச்சந்திரா கோவிலில் நேற்று இரவு நடந்தது.
இந்த கோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலிலும் பிற மதத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை.
நயன்தாரா இந்துவாக மதம் மாறி இருப்பதால் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தின் பாடல் சீ.டி. வெளியீட்டு விழாவில் பங்கேற்க பத்ராச்சலம் கோவிலுக்கு வந்தார். ஸ்ரீசீதா ராமச்சந்திரா கோவிலில் படக்குழுவினர் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனைகள் நடத்தினர்.
அதில் நயன்தாரா பங்கேற்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அதன்பிறகு விழாவில் கலந்து கொண்டார். இசை அமைப்பாளர் இளையராஜா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

வேலாயுதம் ஓடியோ வெளியீடு: ரசிகர்களுக்கு விஜய் அழைப்பு

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா நடித்துள்ளனர்.ராஜா இயக்கி உள்ளார். ஓஸ்கார் பிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ரூ.45 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இது தயாராகி உள்ளது.
இப்படத்தின் பூஜை சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. இதுபோல் பாடல் வெளியீட்டு விழாவையும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்துகின்றனர்.
இவ்விழா வருகிற 28ந் திகதி மதுரையில் நடக்கிறது. விழாவில் பங்கேற்க வரும்படி ரசிகர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
விழா ஏற்பாடுகளை ஓஸ்கார் ரவிச்சந்திரன் செய்து வருகிறார். பாடல் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.2 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாம். சண்டை காட்சிகளையும் பல கோடி செலவில் எடுத்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் 25 நாட்கள் 4 மாவட்டங்களில் எடுத்துள்ளனர்.

புது வீட்டில் குடியேறும் ரம்யாகிருஷ்ணன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்றை கட்டியிருக்கிறார்.24 மணி நேரமும் கமெரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் அந்த பங்களாவை அமைதியான சூழலில் வசிக்க விருப்பம் கொண்டு கட்டியிருக்கிறாராம்.
நடிகை த்ரிஷாவின் நெருக்கமான தோழி நடிகை ரம்யா கிருஷ்ணன். ஹீரோயின் வேஷம், அக்கா கதாபாத்திரம் என பலவிதமான வேடங்களில் திரையுலகை கலக்கிய ரம்யா கிருஷ்ணன் பாளையத்து அம்மன், ராஜ காளியம்மன் உள்ளிட்ட படங்களில் அம்மன் வேடத்திலும் நடித்துள்ளார்.
தற்போது மதுரை மீனாட்சி அம்மன் வேடமணிந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். நட்சத்திர ஹொட்டல்களிலும், நகருக்கு நடுவே அமைந்திருக்கும் வீடுகளிலும் இதுவரை வசித்து வந்த அம்மணிக்கு அமைதியான சூழலில் வசிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்ததாம்.
இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனி பங்களாக கட்ட முடிவு செய்து அதனை தற்போது கட்டியும் முடித்து விட்டார்.
5 கிரவுண்ட் நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த சொகுசு பங்களாவை சுற்றி கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேர கமெரா கண்காணிப்பு தவிர காவலாளிகளும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்களாம்.