Friday 7 October 2011

பிராக்களை பதம் பார்த்த பாக்கியசாலை

என்ன என்கிறீர்களா? உலகில் அதிகபடியான பெண்களை பிராக்களை கழற்சி சாதனை புரிந்துள்ளார். ஒரு நிமிட நேரத்தில் 44 பெண்களின் பிராக்களை கழற்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்த அதிஸ்டகார மனிதன். இதற்கு முன்னர் 42 தடவைகள் பிராக்களை கழற்றி சாதனை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

கண்களை தோண்டியெடுத்தத நபர்

தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார்.

இந்த நபருடைய கண்களை மீளவும் பொருத்தி அவருக்கு பார்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளதாக தெரிவித்திருந்த மேற்படி மருத்துவமனையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் அவர் வாழ்நாள் முழுவதும் குருடாக இருக்க நேரிடும் என நம்புவதாக கூறுகின்றனர்.

அல்டோ மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வேர்சிலியா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஜினோபர்பாக்சி விபரிக்கையில் எனது 26 வருட கால சேவைக்காலத்தில் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை காணநேர்ந்ததில்லை என்று கூறினார்.

அன்டோ பியான்சினி அம்புலன்ஸ் வண்டியில் அவரது தாயாருடன் மருத்துவமனையை வந்நடைந்ததாகவும் தனது மகனுக்கு எவ்வாறாவது பார்வையை மீளப்பெற்றுத்தரும்படி அந்த தாய் கண்ணீர் மல்க மருத்துவர்களிடம் கெஞ்சியமை நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Frog Juice-தவளை பானம் குடிக்கும் மனிதர்கள்


தவளை ஜூஸ் குடிக்கும் இவர்களை பாருங்கள். ஒரு கண்ணாடி பெட்டிக்குள் உயிருடன் தவளைகள் இருக்கின்றன அதில் உங்களுக்கு பிடித்த தவளையை நீங்கள் கை காட்டினால் போதும்.அதை கடைக்காரர் பிடித்து உங்கள் கண் முன்னாலேயே கொலை செய்து உடனே ஜூஸ் செய்து உங்களுக்கு தருவார்கள்.இதை குடிப்பவர்கள் இது தங்களுக்கு மிகவும் உற்ச்சாகம் தருவதாக கூறுகின்றனர். இதை நீங்களும் பாருங்கள்.

மிமிக்ரி செய்யும் பறவை

பொதுவாக சில பறவைகள் குரல் எழுப்புவது இனிமையாக பாடல் படுவது போல கேட்கவே இனிமையாக இருக்கும். அது போலவே இந்த பறவையும் இனிமையாக குரல் எழுப்புகிறது. இதில் என்ன விசித்திரம் என்றால் சில மனிதர்கள் மற்றவர்களை போல மிமிக்ரி செய்வார்கள். இது மாதிரியான மனிதர்களை போல இந்த பறவையும் மற்ற பறவைகளை போல குரல் எழுப்பி நடுவர்களையும் பார்வையளர்களையும் இறுக்கையின் நுநிக்கே கொண்டு வந்து வியக்க வைத்து விட்டதாம். அதுமட்டுமல்லாமல் அதன் எஜமானி சொல்லும் அனைத்து விடயங்களையும் செய்து அசத்துகின்றது இந்த விசித்திர பறவை.

ஒற்றைச் சில்லுச் சைக்கிள் ஓட்டும் வீரன்

சீன மனிதர் ஒருவர் ஒற்றைச் சில்லுடன் கூடிய சைக்கிளை சூப்பராக ஓட்டி அசத்தி வருகின்றார். இவரது சைக்கிளில் முன் சில்லை காண முடியாது உள்ளது. அர்ப்பணிப்பு, பற்றுறுதி,
விடாமுயற்சி ஆகியன இருந்தால் மனிதனால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் நல்ல உதாரணம். இவர் சைக்கிள் ஓட்டும் காட்சிகளைக் கொண்ட வீடியோ இணைய உலகில் மிகுந்த பிரபலம் அடைந்து உள்ளது.

பிரபல நடிகைக்கு உதட்டு முத்தம் கொடுத்த குசும்புக்கார குரங்கு



கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அலையில் ஆழ்ந்தியுள்ளது. முத்தம் கொடுத்த வெற்றி களிப்பில் ஆனந்தப்படும் அதிஷ்டக்கார குரங்கினை காண படங்களை பாருங்கள். 




பாம்பிடம் அகப்பட்ட பெண்


பாம்பென்றால் படையும் நடக்கும் என்பார்கள். ஆனால் இங்கு ஒரு குழுவினர் பாம்புடன் விளையாட போய் வசமாய் மாட்டிக் கொண்ட பரிதாபமான சம்பவம்..

நான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை


பாக்கிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆசாத் ஐம்மு மற்றும் கஹ்மீர் தம்பதிகளுக்கு மூன்றாவதாக பிறந்த இக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தைக்கு வாய் மூலம் பால் ஊட்டுவதற்கு முடியாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் இவ்வாறான அதிசய சம்பவங்கள் இடம்பெறுவது தற்போது காணப்படுகின்ற ஒரு விஷயம். ஆகிலும் இந்த குழந்தைக்கு அவயங்கள் இரண்டு சோடிகளாக காணப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள். நான்கு கண்கள், இரு மூக்குகள், இரு காதுகள் மற்றும் இரு வாய்கள் என விசித்திரமாக காணப்படுகிறது. இந்தக்குழந்தை. 3.2 கிலோ எடையுடன் பிறந்த இக்குழந்தை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 
தமது வைத்தியசாலை வரலாற்றில் இப்படி ஒரு குழந்தை பிறந்துள்ளமை என்பது இதுவே முதல் தடவை என குறித்த வைத்தியசாலையில் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

தற்போது குழாய் மூலம் குழந்தைக்கு பாலூட்டப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நெற்றிக் கண்ணுடன் இந்தியாவில் பிறந்த அதிசயக் குழந்தை

இந்தியாவில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை கடந்த வாரம் பிறந்து உள்ளது. இக்குழந்தைக்கு மூக்கு கிடையாது.

பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. தாய்க்கு வயது 34.

வைத்தியர்கள் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர்.

குழந்தையை பார்க்க தாய் அனுமதிக்கப்படவே இல்லை.

இது தாய்க்கு மிகுந்த கவலையை கொடுத்து உள்ளது. இத்தாய்க்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு.

அதிசய புலிக் குழந்தை


இன்று உலகில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விடயங்களே நடைபெறுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கஷ்டபிரதேசமான கிலிஜிட்டில் 2010 ஆம் ஆண்டு பிறந்துள்ள இக்குழந்தையானது புலியினுடைய முகத்தோற்றத்தை கொண்டமைந்துள்ளது.


மற்றும் இந்த குழந்தையின் உடம்பில் சிவப்பு வரிகளும் காணப்படுகின்றன. மரபணுவில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு பிறந்துள்ளது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Harlequin-type Ichthyosis என்ற மிகவும் அரிதான தோல் நோயே இந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது என குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.



இந்த நோய் காரணமாக குழந்தையின் வாய் மற்றும் கண் காது ஆகியவற்றில் பக்டீரியா பரவியுள்ளது எனவும் 10 வீதம் மாத்திரமே சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்

வேற்றுக் கிரகவாசிகள் விரைவில் பூமிக்கு வருவார்கள்: அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

வேற்றுக் கிரகவாசிகள் அதாவது ஏலியன்கள் பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல், நாம் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்துள்ளோம். அது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் “ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது” என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வருபவர்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும் தெரிவித்தனர்.

இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த கருத்துக்கு கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, “பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் “ஏலியன்’ என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும்.

ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது’ என்றார்.

டொல்பினுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட அமெரிக்க எழுத்தாளர்





அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல புகைப்படப் பிடிப்பாளர் மால்கம் பிரன்னர். இவர் சமீபத்தில் ‘Wet Goddess: Recollection of a dolphin lover,’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


1970 ஆம் ஆண்டுகளில் ஒரு டொல்பினுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட அனுபவம் பற்றி இதில் விலாவாரியாக எழுதியுள்ளார்.
சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டுள்ளமை தொடர்பாக அமெரிக்க எழுத்தாளரான மால்கம் கருத்துத் தெரிவிக்கையில், 1970-களில் எங்கள் வீட்டில் வளர்த்துவந்த டால்பின் ‘ரூபி’ மீது மிகுந்த அன்பு வைத்திருந்தேன்.
ரூபியுடன் சேர்ந்து நீண்ட நேரம் குளிப்பேன். ஒருநாள், என் கை, கால்களை ரூபி செல்லமாக கடித்தாள். அது என் உணர்ச்சியை தூண்டும் விதமாக இருந்தது.
அது செக்ஸ் மூடில் இருப்பதை புரிந்துகொண்டேன். தனது செக்ஸ் தாகத்தை தீர்த்துக் கொள்ள அது என்னை பயன்படுத்தியது என்பதுதான் உண்மை.
சுமார் 9 மாதங்கள் எங்கள் செக்ஸ் உறவு நீடித்தது. அதன் பிற்பாடு எனக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் வீட்டை விட்டு சென்றதும், ரூபி இறந்துவிட்டது. காதல் பிரிவில் மனமுடைந்துதான் அது இறந்தது.

டொல்பின் மிகவும் மென்மையான விலங்கு. பழகியவர்கள் திடீரென பிரிந்து செல்வதைக்கூட டொல்பினால் தாங்க முடியாது. இவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் மால்கம்.

Thursday 6 October 2011

அசையும் படங்கள்! புகைப்படக் கலையின் புதிய பரிமாணம்


இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது.



உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இவை அசைவுகளுடன் கூடிய படங்கள்.

இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.

ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும்.

ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர்.

ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும்.

ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம்.


சிறகு விரித்து பறக்கும் ஓணான் பார்த்ததுண்டா?


இந்தோனேசியாவில் காணப்படும் Draco எனப்படும் ஒருவகை ஓணான்கள் பறக்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது; ஒரு மரத்ததில் இருந்து இன்னுமொரு மரத்திற்கு இவ்ஒணான்கள் பறப்பதன் மூலமே மாறிக்கொள்கின்றன.
அமர்ந்திருக்கும் போது சாதாரணமாக காணப்படும் இவ்ஓணான்கள் பறப்பதற்கு ஆயத்தமானதும் தனது முதுகுப்பதியில் இருந்து சிறகு போன்ற ஓர் அமைப்பை விரித்து பறவை போன்று பறக்க ஆரம்பிக்கின்றது.

உலகிலேயே மிகவும் பருமனுடைய மனிதர்

உலகிலேயே மிகவும் பருமனுடைய மனிதர் இவருடைய பெயர் Patrick D. Deuel இவர் அமெரிக்காவில் உள்ள நெப்ரஸ்க என்ற இடத்தில் வசிக்கிறார் இவரின் வயது 49 இவரின் இப்போதைய நிறை 486 kg இருக்கிறது இவர் தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

101வது பிறந்த நாளை கொண்டாடும் மூதாட்டிகள்


உலகிலேயே வயது கூடிய இரட்டை சகோதரிகள் தமது 101வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடியுள்ளனர்.
இரட்டை சகோதரிகளில் உலகில் வயது கூடியவர்களாக இவர்களே பெயர் பதித்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாரி மற்றும் கெப்ரியல் எனும் இரட்டை சகோதரிகளே இந்த சாதனைக்கு உரியவர்கள்.
1910ஆம் ஆண்டு பிறந்த இவர்கள் இப்போது பெல்ஜியம் ஸ்பா நகரிலுள்ள வயோதிபர் இல்லத்தில் வசிக்கின்றனர்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இச் சகோதரிகளின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது.

பாலினால் செய்த ஆடை ஜேர்மன் விஞ்ஞானியின் வெற்றி


பாலினால் பின்னப்பட்ட ஆடை வகைகளை உற்பத்தி செய்வதில் ஜேர்மன் விஞ்ஞானியொருவர் வெற்றி கண்டுள்ளார்.
ஜேர்மன் ஹெனோவரில் வசிக்கும் இவ் விஞ்ஞானியான 28 வயதுடைய ஏன்க் டொமஸ் எனும் யுவதியே இவ்வாறு பாலாலான ஆடைகளை உற்பத்தி செய்துள்ளார்.
பால் மற்றும் பல திரவியங்களை பயன்படுத்தி இவ் ஆடைக்கான துணிவகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அவர் இத் துணிவகைகளைப் பயன்படுத்தி ஞஆடைஉh எனும் பெயரில் பல அலங்கார ஆடைகளை தயாரித்துள்ளார்.
தோலை பாதுகாப்பாக்க வைத்திருக்க கூடிய விதத்தில் புரதச் சத்து அடங்கிய வகையில்  இவ் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஆடை வகைகள்  எதிர்காலங்களில் நவீன ஆடையலங்கார உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday 5 October 2011

சீனாவில் தோன்றிய கடல் கன்னி


சீனாவில் உள்ள கடல் கரை ஒன்றில் கடல் கன்னி ஒருவர் சில வாரங்களுக்கு முன் தோன்றி இருந்தார் என்று இணையங்களில் படங்களுடன் பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது.



ஆயினும் இது உண்மையிலேயே கடல் கன்னியின் உருவம்தானா? அல்லது பம்மாத்து வேலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாது உள்ளது. படங்களை பார்த்து நீங்களே முடிவு எடுங்கள்.

வெற்றி


தேனீக்கள் ஓய்வின்றி உழைத்தால்

தித்திக்கும் தேன் நிச்சயம்

உழவர்கள் ஓய்வின்றி உழைத்தால்

உயிர்வாழ உணவு நிச்சயம்

தோல்விகளையும் துன்பங்களையும்

கஷ்டங்களையும் நஷ்டங்களையும்

தாங்கிக்கொண்டு தன்னம்பிக்கையோடு

உழைத்தால் வெற்றிநிச்சயம்.

சங்ககாரவுக்கு இரு விருதுகள்

ஐ.சி.சி விருதுகளில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதினையும் மக்கள் தெரிவு விருதினையும் இலங்கை அணி வீரர் குமார் சங்ககார பெற்றுக் கொண்டுள்ளார்.

இவற்றுள் மக்கள் தெரிவு விருதுக்காக பொதுமக்கள் அளித்த வாக்குமூலம் குமார் சங்ககார தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விருதுக்கான வாக்கெடுப்பில் தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த ஹசீம் அம்லா, இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜோனத்தன் டுரோட், மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிஸ் கெய்ல்ஸ் மற்றும் இந்திய அணியின் தலைவர் மஹிந்திர சிங் டோனி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுடனான ரெஸ்ட் போட்டியில் சங்ககார கலந்து கொண்டுள்ளமையால் அவரால் நேரில் சென்று விருதனை பெற்றுக்கொள்ள முடியாது போனமை குறிப்பிடத்தக்கது. 

சிறந்த ஓவியம்

சிறந்த ஓவியம்

தலைவலி இயற்கை மருத்துவம்

ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.

அறிகுறிகள்:

     தலைவலி.

தேவையானப் பொருள்கள்:

    ஆடாதோடை இலை.
    நல்லெண்ணெய்.


செய்முறை:

ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து ,காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.



ஆடாதோடை இலை
 நல்லெண்ணெய்
ஆடாதோடை இலை   

தற்கொலையை தொலைபேசியில் படம் பிடித்த பெண்

மும்பை, எம்.ஐ.டி.சி. ஏரியாவில் கோல்டன் அபார்ட்மென்ட்டில் உள்ள முதல் மாடியில் வசித்தவர் சாம்தர்ஷி சிங். இவரது மனைவி நிதி சிங் (24). சாம்தர்ஷியும், நிதியும் காதலித்து, கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த அபார்ட்மென்ட்டில் குடியேறினர்.

இந்நிலையி்ல், சாம்தர்ஷி சிங் நேற்றுமுன்தினம் வழக்கம் போல காலையில் வேலைக்கு புறப்பட்டார். அவரை தடுத்து நிறுத்திய நிதிசிங் சிறிதுநேரம் அவரிடம் பேசினார். அதன்பின், சாம்தர்ஷி மீண்டும் வேலை செல்ல புறப்பட்டார். அப்போது மீண்டும் அவரை, நிதிசிங் மீண்டும் தடுத்துள்ளார்.

அதை கண்டு கொள்ளாத சாம்தர்ஷி சிங், வேலைக்கு புறப்பட்டு சென்றார். அதன்பின் சிறிது நேரத்திற்கு பின் அவரது மொபைல்போனுக்கு, ஸாரி என்ற எஸ்.எம்.எஸ். நிதிசிங்கின் மொபைல்போனில் இருந்து வந்துள்ளது. இதையும் சாம்தர்ஷி சிங் கண்டுகொள்ளவில்லை.

மதியம் நிதி சிங்கின் தந்தை, அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. மாலை மொபைல் போன் சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது.

இந்நிலையில் இரவு 9.30 மணிக்கு வீட்டிற்கு வந்த சாம்தர்ஷி சிங், வீ்ட்டு கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதுகுறித்து சாம்தர்ஷி சிங், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது, நிதி சிங் அறையின் பேனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். நிதி சிங்கின் உடலை கைப்பற்றிய போலீசார், அதன் அருகே இருந்த மொபைல் போன் மற்றும் நிதி சிங் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

போலீசாரால் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தான் தற்கொலை செய்து கொள்வதற்காக, கணவனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அடுத்த பிறவியில் 2 பேரின் குடும்பத்திற்கும் பொதுவான ஒருவராக பிறக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய சோதனையில் காலை 10 மணியளவில் நிதி சிங் தற்கொலை செய்திருக்கலாம் என கூறினர். மேலும் அவரது செல்போனில் நிதி சிங் தற்கொலை செய்யும் காட்சியும் பதிவாகியிருந்தது.

சுமார் 1.33 மணிநேரம் ஓடக் கூடிய அந்த வீடியோ காட்சியில், முதலில் கடந்த பிப்ரவரி மாதம் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் தாங்க முடியாத மனவேதனையால் இந்த முடிவிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, நிதி சிங் மற்றும் சாம்தர்ஷி சிங் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 2 பேரும், கடந்த 4 மாதங்களுக்கு முன், இந்த அபார்ட்மெண்ட்டிற்கு குடிவந்தனர். தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

புகை பிடிக்கும் பெண்கள்..

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாகஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது' என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.
ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, "குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே' என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது.

தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.

இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில், "கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது' என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் தான் அதிகம்.,

கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11 சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


சீமான்: விஜய் கோபம்!

டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவாகப்போகும் புதிய படத்திற்கு கோபம் என்று பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புரட்சிகரமான படங்களை ‌எடுத்து வரும் டைரக்டர் சீமான், அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு பகலவன் என்று பெயரிடப்பட்டுள்ளது. நாயகனாக விஜய் நடிக்கவிருக்கிறார். சிறைக்குள்ளேயை திரைக்கதை எழுதி முடித்து திரும்பியிருக்கும் சீமான்,


படத்தின் டைட்டிலை கோபம் என வைத்துக் கொள்ளலாமா? என்று நாயகன் விஜய்யிடம் கேட்டிருக்கிறார். காவலன் படத்திற்கு தியேட்டர் கிடைக்காத கோபத்தில் இருக்கும் விஜய்யும், கோபம் என்ற தலைப்புக்கு டபுள் ஓ.கே. சொல்லி விட்டாராம். இதனால் பகலவன் விரைவில் கோபம் என்று மாற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிகின்றன. அ‌தேநேரம் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்த படத்தில் இருந்து விலகி, படத்தை கை மாற்றி விட துடிக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது. தாணு விலகினாலும் கோபத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறார்களாம் விஜய்யும், சீமானும்! 

நாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலாம் ! தவறில்லை lol....


நிறையப் பேருக்கு இவரை மறந்தே போயிருக்கும். அந்த அளவுக்கு இப்போது சுத்தமாக தமிழில் நடிப்பதையே விட்டு விட்டார் பத்மப்பிரியா. மாறாக மலையாளத்தில்தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்காலிகமாக நடிப்புக்கு டாடா காட்டி விட்டுப் படிக்கப் போகிறாராம் பத்மப்பிரியா.
தமிழில் சாமி இயக்கிய மிருகம் படப்பிடிப்பின்போது இவருக்கும், சாமிக்கும் இடையே கடும் மோதலாகி விட்டது. இது பின்னர் பெரும் பிரச்சினையாகி சாமிக்கு தடையும் விதித்தனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் பதமப்பிரியாவை தமிழ் சினிமாவில் மெதுவாக ஒதுக்க ஆரம்பித்து விட்டனர். அவரும் அதைப் பற்றிக்கவலைப்படாமல் மலையாளக் கரையோரமாக ஒதுங்கிக் கொண்டார். அங்கு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்பிரியா தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
அந்தக் காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் பத்மப்பிரியா. இந்தப் படத்தை முடித்து விட்ட அவர் விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகிறார். அங்கு படிக்கப் போகிறாராம்.
அப்படியானால் மறுபடியும் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டால், சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. படிப்பு முடிந்ததும் மறுபடியும் நடிக்க வருவேன். நடிப்பை விட்டு விட மாட்டேன். இடையில் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் கூட நடிப்பேன்.
நான் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளேன். நடிப்பில் நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது.
என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை.
கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது என்கிறார் பத்மப்பிரியா.

சிறுவனை கொன்ற வைத்தியரின் பித்தலாட்டம் அம்ப

மன்னார் மூர்வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தின் போது 07 வயது சிறுவன் ஒருவன்
 உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் மன்னார் பள்ளிமுனை 49 வீட்டுத்திட்டம் கிராமத்தினைச் சேர்ந்த செபஸ்ரியான் அபிசேக் (வயது-07)என தெரிய வந்துள்ளது. குறித்த சிறுவன் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் தரம்-01 இல் கல்வி கற்று வந்துள்ளார்.


சம்பவ தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் மூர்வீதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் குறித்த சிறுவனின் தந்தையான செபஸ்ரியான்  காவலாளியாக கடமையாற்றி வருகின்ற நிலையில்  குறித்த சிறுவன் தந்தையுடன் குறித்த சிறுவனும் அலுவலகம் சென்றுள்ளார்.

பின் மாலை 4.மணியளவில் தந்தை பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து மிக்ஸர் வேண்டுவதற்காக கடைக்குச் சென்றுள்ளார்.

இதன்  போதே மன்னார் மூர்வீதி பிரதான வீதி வழியாக வந்து கொண்டிருந்த வைத்தியர் ஒருவரினால் செலுத்தி வரப்பட்ட பிக்கப் ரக வாகனம் குறித்த சிறுவன் மீது மோதியுள்ளது.

இதன் பொது குறித்த சிறுவனின் தலை மற்றும் உடலில்  பலத்த காயங்கள் ஏற்பட்ட  நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவசரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்தார். குறித்த வாகனத்தை செலுத்தி வந்த வைத்தியர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சடலத்தை மன்னார் நீதவான் திருமதி.கே.ஜீவரானி இன்று திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அரைக்குச் சென்று   பார்வையிட்டதோடு சடலப்பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க குறித்த வைத்தியர் உட்பட அவரின் உறவினர்கள் குறித்த சிறுவன் உடற்சுகவீனம் காரணமாக வாகனத்திற்கு முன் விழுந்ததன் காரணத்தினாலேயே உயிரிழந்துள்ளதாக சடலப்பரிசோதனை அறிக்கையை மாற்ற குறித்த சிறுவனுக்கு வலிப்பு இருப்பதாக கதை கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.

குறித்த சடலப்பரிசோதனை அறிக்கையில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் குறித்த சடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

வயிற்றில் பாம்பை சுமந்த பெண்

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப்போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினார்கள்.

அதேவேளை பாடரிசியா வலியால் துடித்ததுமல்லாது உட்கொண்ட உணவை வாந்தி எடுத்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதைப்பார்த்து குழம்பிய டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடிவு செய்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாடரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.

உடனடியாக பாடரிசியவுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த அந்தப் பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடியே வெளியே வந்தது. இதைப் பார்த்த நேர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அந்தப் பாம்பு குட்டியாக இருந்தபோதே பாடரிசியாவின் குடலுக்குள் புகுந்து, பாடரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்டு அதுவும் வளர்ந்திருக்கலாம். எப்படி அந்தப் பாம்பு பாடரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாடரிசியா சுற்றுலாச் சென்றவேளை ஆற்றுநீரை அள்ளிக் குடித்திருக்கிறார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் சென்று பொரித்து வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாடரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு வெள்ளை நிறமாகவும் , 1.83 மீற்றர் நீளமாகவும் உடலில் கறுப்புப் பட்டைகளுடனும் காணப்பட்டது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது.

அதைப் பொறுக்கமுடியாமல் அவர் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போனார். பின்னர் அவரைச் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்துவிட்டனர். சில நாட்கள் கழித்து அந்தப் பெட்டிக்குள் இருந்து ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என பின்பு தெரிய வந்தது.

இதேபோல 1642 இல் ஜேர்மனியைச் சேர்ந்த காத்ரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாகும். இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஆரோக்கியம் மேம்பட்ட இந்த நவீன காலத்தில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியே வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

சந்தன கடத்தல் வீரப்பன் மகள் காதல் கணவருடன் செல்ல அனுமதி

சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி. இவருக்கு வித்யாராணி, பிரபா ஆகிய 2 மகள் உள்ளனர். வித்யாராணி சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து வந்தார். பெரம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மரிய தீபக். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மரிய தீபக் தனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி சட்ட விரோத காவலில் தடுத்து வைத்திருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், நான் லயோலா கல்லூரியில் படித்த போது வித்யாராணியுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் 2 1/2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்தோம். கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டோம். கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி பதிவு செய்தோம். அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் எனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி மேட்டூர் மேச்சேரியில் உள்ள வீரப்பன் சமாதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்றார். அதன் பிறகு வித்யாராணியை என்னுடன் அனுப்ப முத்துலட்சுமி மறுத்து விட்டார். நாங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்ததால் எங்களை பிரிக்க முத்துலட்சுமி முயற்சி செய்கிறார்.

எனவே எனது மனைவியை மீட்டு தரும்படி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே முத்து லட்சுமியின் சட்ட விரோத காவலில் இருந்து வரும் என் மனைவியை மீட்டு என்னிடம் ஒப்படைக்கும்படி செம்பியம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன், ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் வித்யாராணியை நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் வித்யாவை அழைத்து, நீ யாருடன் வாழ ஆசைப்படுகிறாய்? என்று கேட்டனர். அதற்கு வித்யா கணவர் தீபக்குடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், வித்யாராணி மேஜரான பெண். அவர் சட்டப்படி தீபக்கை திருமணம் செய்துள்ளார். அவர் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே வித்யா கணவர் தீபக்குடன், சேர்ந்து வாழ அனுமதி அளிக்கிறோம் என்று உத்தர விட்டனர்.

இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த வித்யாவை தீபக் மகிழ்ச்சியுடன் வரவேற்று தன்னுடன் அழைத்துச் சென்றார். 

நிர்வாணமாக ஓடிய பெண்

சென்னை பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் பொட்டுத் துணி கூட இல்லாமல் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேய் என்று கூறி மக்கள் பீதியடைந்தனர்.

நேற்று பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் ஒரு இளம் பெண் உடைகளின்றி, தலைவிரி கோலமாக ஓடி வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்தப் பகுதியில் அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோவிந்த் உடனடியாக மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

மகளிர் போலீஸார் போலீஸ் ஜீப்பில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைப் பிடித்து ஆடைகளை அணிவித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், தென்கல்பாக்கம் கிராமம் ஆகும். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம்.

10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நான் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.

ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன் என்றார் அவர்.

இதற்கிடையே, இந்தப் பெண் வந்த வழியெல்லாம் அவரைப் பார்த்த பொதுமக்கள் பேய் என நினைத்து ஓடி ஒளிந்ததும் தெரிய வந்துள்ளது.

அந்தப் பெண் சொல்வது உண்மையா அல்லது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

10 ஆண்டுகளில் 15 பேரை திருமணம் செய்த மன்மதன்

பத்திரிக்கைகளில் மணப்பெண் தேவை என விளம்பரம் செய்து கடந்த 10 ஆண்டுகளில் 15 பேரை ஏமாற்றி திருமணம் செய்து பணம்,  நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வல்லபுழா பகுதியை சேர்ந்தவர் மஜீத். 10 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

6 மாத குடித்தனம்-அப்புறம் அடுத்த கல்யாணம்

பிறகு முதல் மனைவிக்கு தெரியாமல் பத்திரிகைகளில் மணப்பெண் தேவை என விளம்பரம் கொடுத்து மோசடி வேலையை தொடங்கினார்.

விளம்பரத்தில் தான் ஒரு அனாதை என்றும், தனக்கு உறவினர்கள் யாரும் கிடையாது என்றும் குறிப்பிடுவார். பிறகு தனது நண்பர்கள் சிலருடன் பெண் பார்க்க செல்லும் மஜித் திருமணம் ஆன பிறகு அந்த பெண்ணுடன் 6 மாதம் குடித்தனம் நடத்துவார்.

பின்னர் அங்கிருந்து நைசாக நழுவும் அவர் மீண்டும் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து அடுத்த பெண்ணை தேடுவார். இப்படியாக பாலக்காடு,  மலப்புரம்,  கோழிக்கோடு,  கண்ணூர் மாவட்டங்களை சேர்ந்த 15 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

இவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை வரதட்சனையாக பெற்று மோசடி செய்துள்ளார். கோட்டக்கல் போலீஸில் சிக்கினார்

மஜித்திடம் ஏமாந்த மலப்புரம் எடரிக்கோடு பகுதியை சேர்ந்த கதீஜா என்ற பெண் கோட்டக்கல் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீசார் மஜித்தை கைது செய்து விசாரணை நடத்தியபோது இந்த தகவல்கள் வெளியாகின.

16 வயதுப் பெண்ணை மணக்க முயற்சித்தபோது கைது

16வது பெண்ணை ஏமாற்ற பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார். மஜீத் ஏமாற்றிய பெண்களின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவி

மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை,  பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆந்திரா கர்னூல் நகரில்,  நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது:

பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை,  மது குடிக்கும் பழக்கமுள்ள,  கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும்.

கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால்,  10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும்.

கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார்.